ஆ: ஆனந்தத்தேன் சிந்தும் பூஞ்சோலையில்
ஆனந்தத்தேன் சிந்தும் பூஞ்சோலையில்
ஆயிரம் சீர் கொண்டு வந்தேனம்மா
கா..தல் தே..கம் அந்த சுகம் கண்டுகொள்ள
கொஞ்சம் இங்கே வந்தால் என்னம்மா
பெ: ஆனந்தத்தேன் சிந்தும் பூஞ்சோலையில்
ஆயிரம் சீர் கொண்டு வந்தவரே
கா..தல் வே..கம் அந்த சுகம் கண்டுகொள்ள
மஞ்சள் தொட்டுத்தந்தால் என்னைய்யா
ஆ: ஆனந்தத்தேன் சிந்தும் பூஞ்சோலையில்..
ஆ: நீ நடந்து போகையிலே
பூ நடந்து போகக்கண்டேன் (பெ: <சிரிப்பு>)
நீ சிரிக்கும் பொன்னழகில்
பால் வழிந்து ஓடக்கண்டேன்
பெ: முத்தோ மணியோ எல்லாம் கவிதை
எங்கே கற்றுக்கொண்ட வித்தையிது
ஆ: சொல்லித்தந்ததுந்தன் பார்வை
அள்ளித்தந்ததுந்தன் ஜாடை
பெ: அன்பில் ஆடும் உள்ள..ம் கண்டேன்
ஆ: ஆனந்தத்தேன் சிந்தும் பூஞ்சோலையில்
ஆயிரம் சீர் கொண்டு வந்தேனம்மா
பெ: நேரமுண்டு காலமுண்டு..
மாலையிட சொந்தமுண்டு
மாலையிட்ட பின்னால் இந்த..
சோலைக்கிளி கொஞ்சும் வந்து
ஆ: பொன்னே பூவே எல்லாம் குறும்பு
எங்கே கற்றுக்கொண்ட வித்தையிது
பெ: அச்சம் தந்ததுந்தன் வேகம்
வெட்கம் தந்ததுந்தன் மோகம்
ஆ: அன்பில் ஆடும் உள்ளம் கண்டேன்
பெ: ஆனந்தத்தேன் சிந்தும் பூஞ்சோலையில்
ஆயிரம் சீர் கொண்டு வந்தவரே
கா..தல் வே..கம் அந்த சுகம் கண்டுகொள்ள
மஞ்சள் தொட்டுத்தந்தால் என்னைய்யா
ஆ: ஆனந்தத்தேன் சிந்தும் பூஞ்சோலையில்
ஆயிரம் சீர் கொண்டு வந்தேனம்மா
Related Posts
September 21, 2024
0