பெ: தொடு தொடு எனவே வானவில் என்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்
ஆ: விடு விடு எனவே வாலிப மனது
விண்வெளி விண்வெளி ஏறும்
பெ: மன்னவா ஒரு கோவில் போல்
இந்த மாளிகை எதற்காக
ஆ: தேவியே என் ஜீவனே இந்த
ஆலயம் உனக்காக
பெ: வானில் ஒரு புயல் மழை வந்தால்
அழகே எனை எங்கனம் காப்பாய்
ஆ: கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து
இமைகள் எனும் கதவுகள் அடைப்பேன்
பெ: சாத்தியமாகுமா
ஆ: நான் சத்தியம் செய்யவா..
பெ: தொடு தொடு எனவே வானவில் என்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்....
பெ: இந்த பூமியே தீர்ந்து போய்விடில்
என்னை எங்கு சேர்ப்பாய்
ஆ: நட்சத்திரங்களை தூசு தட்டி
நான் நல்ல வீடு செய்வேன்
பெ: நட்சத்திரங்களின் சூட்டில் நான்
உருகிப்போய்விடில் என் செய்வாய்
ஆ: உருகிய துளிகளை ஒன்றாக்கி
என் உயிர் தந்தே உயிர் தருவேன்
பெ: ஏ ராஜா இது மெய்தானா
ஆ: ஏ பெண்ணே தினம் நீ செல்லும் பாதையில்
முள்ளிருந்தால் நான்
பாய் விரிப்பேன் என்னை
பெ: நான் நம்புகிறேன் உன்னை
பெ: தொடு தொடு எனவே வானவில் என்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்
ஆ: விடு விடு எனவே வாலிப மனது
விண்வெளி விண்வெளி ஏறும்....
பெ: நீச்சல் குளம் இருக்கு நீரும் இல்லை
இதில் எங்கு நீச்சலடிக்க
ஆ: அத்தர் கொண்டு அதை நிரப்ப வேண்டும்
இந்த அல்லி ராணி குளிக்க
பெ: இந்த ரீதியில் அன்பு செய்தால்
என்னவாகுமோ என் பாடு
ஆ: காற்று வந்து உன் குழல் கலைத்தால்
கைது செய்வதென ஏற்பாடு
பெ: பெண் நெஞ்சை அன்பால் வென்றாய்
ஆ: ஏ ராணி அந்த இந்திரலோகத்தில்
நான் கொண்டு தருவேன் நாள் ஒரு பூ வீதம்
பெ: உன் அன்பு அது போதும்
பெ: தொடு தொடு எனவே வானவில் என்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்
ஆ: விடு விடு எனவே வாலிப மனது
விண்வெளி விண்வெளி ஏறும்
பெ: மன்னவா ஒரு கோயில் போல்
இந்த மாளிகை எதற்காக
ஆ: தேவியே என் ஜீவனே இந்த
ஆலயம் உனக்காக
பெ: வானில் ஒரு புயல் மழை வந்தால்
அழகே எனை எங்கனம் காப்பாய்
ஆ: கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து
இமைகள் எனும் கதவுகள் அடைப்பேன்
பெ: சாத்தியமாகுமா
ஆ: நான் சத்தியம் செய்யவா......
Related Posts
September 21, 2024
0
Comments
Post a Comment