🎧 கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே

கண்ணே கலைமானே
கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே
கண்ணே கலைமானே
கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத் தான் கேட்கிறேன்

ரா-ரி-ரா-ரோ
ஒ-ரா-ரி-ரோ
ரா-ரி-ரா-ரோ
ஒ-ரா-ரி-ரோ

கண்ணே கலைமானே
கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே

ஊமை என்றால்
ஒரு வகை அமைதி
ஏழை என்றால்
அதில் ஒரு அமைதி
நீயோ கிளிப்பேடு
பண்பாடும் ஆனந்தக் குயிற்பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது
பேதைப் போல விதி செய்தது
கண்ணே கலைமானே
கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத் தான் கேட்கிறேன்

ரா-ரி-ரா-ரோ
ஒ-ரா-ரி-ரோ
ரா-ரி-ரா-ரோ
ஒ-ரா-ரி-ரோ

காதல் கொண்டேன்
கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான்
கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன்
எந்நாளும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி
நீ தான் என்றும், என் சன்னிதி
கண்ணே கலைமானே
கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத் தான் கேட்கிறேன்

ரா-ரி-ரா-ரோ
ஒ-ரா-ரி-ரோ
ரா-ரி-ரா-ரோ
ஒ-ரா-ரி-ரோ
ரா-ரி-ரா-ரோ
ஒ-ரா-ரி-ரோ
ரா-ரி-ரா-ரோ
ஒ-ரா-ரி-ரோ

November 04, 2024
0

Comments

Search

Contact me

Total Pageviews

© 2025 Jeeva Ragam. All Rights Reserved.